ஓ நாயாக மாறினாரா மஹிந்த? விமல் கைது செய்யப்படுவதும் உறுதியாம்!

தற்போது என்னை எல்லோரும்  ஓநாய் என அழைக்கின்றார்கள்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கவலை தெரிவித்துள்ளார்.

வெலிகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒரு சூனிய வேட்டை நடத்தி வருகின்றது.

இந்த வகையில் அடுத்து கைது செய்யப்போவது யார் என்றால், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவே கைது செய்யப்பட உள்ளார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Comments