மூன்று முக்கிய விசாரணைகள் நிறைவு!

மூன்று பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

ரக்னா லங்கா, அவன்கார்ட் நிறுவனங்கள் தொடர்பிலான விசாரணைகள் இதில் அடங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச் டப்ள்யூ குணதாச தெரிவித்தார்.

இதனை தவிர சிலாபம் மற்றும் குருநாகல் கைத்தொழில் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளும் நிறைவடைந்துள்ளன.

இந்த அறிக்கைகளை அடுத்த வாரமளவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Comments