நீ சுட்டு விளையாடுவதற்கு தமிழர்கள் என்ன பொம்மைகளா? கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குறித்த மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கிளிநொச்சி பாடசாலை மாணவர்களினால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த கண்டன பேரணியானது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை செல்லவுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் சன்முகராஜ் பிரபாகரன் தெரிவித்தார்.

Comments