வடக்கு வன்முறைகளுக்கு இது தான் முக்கிய காரணம்?

வடக்கில் இடம்பெறும் வன்முறைகளுக்கு வெளிச் சக்திகளே காரணம் என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்  குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்துவதன் ஊடாக குறுகிய லாபம் பெற்றுக் கொள்கின்ற சில சக்திகள், அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் இருக்கின்றன.

இதனால் பாதுகாப்பு தரப்பினர் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.இந்த விடயத்தில் உரிய விசாரணைகளை நடத்தி, பாதுகாப்பு தரப்பினர் நம்பிக்கையை நிலை நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments