பெண்களிடம் மட்டுமே பிக்பொக்கற் அடிக்கும் 17 வயது யுவதி கைது!!
நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் பிக்பொக்கற் அடித்து வந்த 17 வயது யுவதி ஒருவரை கட்டுநாயக்க பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சி.ஐ. பிரியந்த ஏக்க நாயக்க தெரிவித்தார்.
கட்டுநாயக்க, எவரிவத்தை பிரதேசத்தில் உள்ள கடைக்கு சிறு குழந்தையுடன் வந்த பெண் ஒருவரின் பணத்தை சந்தேக நபரான யுவதி திருட முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட யுவதியிடம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்ட போது சந்தேக நபரினால் திருடப்பட்ட கைத்தொலைபேசி, பேர்ஸ், அடையாள அட்டை உட்பட பல்வேறு பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட யுவதி கற்பிட்டி, கந்தக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்க வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் இவர் இணைந்துள்ளார். சனிக்கிழமை தினங்களில் தன்னுடன் வேலை செய்யும் நண்பிகளுடன் நீர்கொழும்பு இரவுநேர சந்தைக்கு செல்வதனை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
பின்னர் தனித்து இரவுநேர சந்தைக்குச் சென்று பெண்களின் பணம், கைத் தொலைபேசிகளை திருடி வந்துள்ளார். இவர் பெண்களிடம் மாத்திரமே இவ்வாறு திருடியுள்ளார்.
இவரிடமிருந்து 55 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய செல்லிடத் தொலைபேசி -1, 30 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய தொலைபேசி – 3, தேசிய அட்டைகள் – 11, பணப்பைகள் – 35 என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கட்டுநாயக்க, எவரிவத்தை பிரதேசத்தில் உள்ள கடைக்கு சிறு குழந்தையுடன் வந்த பெண் ஒருவரின் பணத்தை சந்தேக நபரான யுவதி திருட முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட யுவதியிடம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்ட போது சந்தேக நபரினால் திருடப்பட்ட கைத்தொலைபேசி, பேர்ஸ், அடையாள அட்டை உட்பட பல்வேறு பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட யுவதி கற்பிட்டி, கந்தக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்க வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் இவர் இணைந்துள்ளார். சனிக்கிழமை தினங்களில் தன்னுடன் வேலை செய்யும் நண்பிகளுடன் நீர்கொழும்பு இரவுநேர சந்தைக்கு செல்வதனை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
பின்னர் தனித்து இரவுநேர சந்தைக்குச் சென்று பெண்களின் பணம், கைத் தொலைபேசிகளை திருடி வந்துள்ளார். இவர் பெண்களிடம் மாத்திரமே இவ்வாறு திருடியுள்ளார்.
இவரிடமிருந்து 55 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய செல்லிடத் தொலைபேசி -1, 30 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய தொலைபேசி – 3, தேசிய அட்டைகள் – 11, பணப்பைகள் – 35 என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்ற பெண் ஒருவரிடம் இந்த யுவதி 70 ஆயிரம் ரூபா பணத்தை திருடியுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சி.ஐ. பிரியந்த ஏக்க நாயக்கவுக்கு கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபர் கட்டுநாயக்க, எவரிவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Comments
Post a Comment