23 ஆம் திகதி வெளிவரும் எவன்காட் தொடர்பான தீர்ப்பு!

காலி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள எவன்காட் கப்பல் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 23ம் திகதி வழங்கப்படும் என காலி தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

குறித்த வழக்கு காலி தலைமை நீதவான் நிலுபுலீ லங்காபுர முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த போது எவன்காட் நிறுவனத்துக்கு சொந்தமான குறித்த கப்பல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments