24 வருடங்களின் பின் சிக்கிய போலி அரசாங்க அதிகாரி!
போலி கல்வி ஆவணங்களை சமர்ப்பித்து 24 வருட காலமாக அரச சேவையில் கடமையாற்றி வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பதுளை பகுதியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை சேவையில் நிரந்தரமாக்க அவரின் ஆவணங்களை பரிசோதித்த போதே அவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சேவையில் இணைந்துக்கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments
Post a Comment