மஹிந்தவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மேலும் மூவர் 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தப்படாமல் இருந்த 14.25 கோடி ரூபாவை பெற்றுக்கொள்ளும் வகையில் தொடுக்கப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த நான்கு பேருக்கு எதிராக இலங்கை போக்குவரத்து சபை கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, திருத்தப்பட்ட முறைப்பாட்டு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ சார்பாக ஆஜரான நீதவான் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாபா மற்றும் காமினி செனரத் ஆகியோர் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
எனினும், திருத்தப்பட்ட முறைப்பாடொன்றின் மூலம் சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் பெயர்கள் வழக்கிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment