மன்னாரில் திடீரென உள்வாங்கிய கடல்!

தமிழகம்- பாம்பன் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியுள்ளது.

குறித்த கடல் பகுதியில் திடீரென சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியுள்ளதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் கரையில் நிறுத்தபட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தது.

கடந்த சில நாட்களாக மன்னார்வளைகுடா கடல்பிராந்தியத்தில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துவந்தது.

இதனால் ராட்சத அலைகளால் உருவாகி பாம்பன் சின்னப்பாலம் குந்துகால் தெற்குவாடி மற்றும் மண்டபம் தெற்குப் பகுதி நாட்டு படகு மீனவர்கள மீன்பிடிக்கச்செல்லாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந் நிலையில் இன்று திடீரேன சின்னப்பாலம் கடல் பகுதியில் சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியது.

இதனால் கரையில் நிறுத்ப்பட்டிருந்த 30 க்கும் க்கும் மேற்ப்பட்ட படகுகள் சேதமடைந்தது. மேலும் கடலுக்குச் சென்றவர்களும் பெரும் நஷ்டத்தோடு கரை தீரும்பியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Comments