உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகும் மைத்திரி!

ஹோமாகம, பிட்டப்பன பகுதியில்  நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழக பகுதியை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன பார்வையிட  சென்ற வேளை தோட்டா ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த   கட்டட நிர்மாணிப்பு  பகுதிக்கு  வெல்டிங்  சேவை  செய்வதற்காக குறித்த நபர் வந்துள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்  குறித்த சந்தேகநபர் நேற்று இரவு அவ்விடத்திற்கு சேவைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments