தேரர் மீது நபரொருவர் தாக்கியதால் பொலிஸாரை தாக்கிய கிராம மக்கள்!

ஹபராதுவ மீபே பிரதேசத்தில் விகாரை ஒன்றின் தேரரை தாக்கியமை தொடர்பில் நேற்று இரவு தீவிர நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

மீபோ ஸ்ரீ சுதுர்ஷனாராம விகாரை தேரரை அந்த பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவர் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த பிரதேச மக்கள் தேரர் மீது தாக்கிய நபர் மற்றும் மேலும் இருவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் கராப்பிடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தினை கட்டுப்படுத்த சென்ற ஹபராதுவகாவற்துறை இரு அதிகாரிகளே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments