சிவனொளிபாத மலையில் ஹோட்டலா?: முஸ்லிம்களை குறிவைக்கும் இனவாதம்


.
sripada

வர­லாற்றுப் புகழ்­மிக்க சிவ­னொ­ளி­பாத மலை இன்று சர்ச்­சைக்­கு­ரிய பிர­தே­ச­மாக மாறி­யுள்­ளது. மலைப் பிர­தேசப் பகு­தியில் மத்­திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த நிறு­வ­ன­மொன்று ஹோட்­ட­லொன்று நிர்­மா­ணிக்கும் பணி­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக சர்ச்­சைகள் கிளப்பி விடப்­பட்­டுள்­ளன.
இந்த மலையில் சிவ­பெ­ரு­மா­னு­டைய பாதச் சுவடு பதிந்­துள்­ள­தாக நம்­பிக்கை வைத்­துள்ள இந்­துக்­கள் இம்­ம­லையை சிவ­னொ­ளி­பா­த­மலை என்­ற­ழைக்­கி­றார்கள். இதே­வேளை முஸ்­லிம்கள் இம்­ம­லையில் ஆதம் (அலை) யின் பாதச்­சு­வடு பதிந்­துள்­ள­தாக நம்­பிக்கை வைத்து பாவா ஆதம் மலை என்­ற­ழைக்­கி­றார்கள்.
பெரும்­பான்மை மக்­க­ளான பெளத்­தர்கள் புத்­த­பெ­ரு­மானின் பாதச்­சு­வடே அங்கு பதிந்­துள்­ள­தாக நம்­பிக்கை வைத்­துள்­ளார்கள். இதனால் அவர்கள் இம்­ம­லையை ஸ்ரீபா­த­மலை (கண்­ணி­யத்­துக்­கு­ரிய பாதம் பதிந்த மலை) என்­கி­றார்கள்.
சேர்­ரொபர்ட் நொக்ஸ் தனது புத்­த­கத்தில் விண்­ணு­லகில் இருந்து வந்த புத்­த­பெ­ருமான் கால்­ப­தித்­த­தாக குறிப்­பிட்­டுள்ளார். கௌதம புத்தர் 500 சீடர்­க­ளுடன் கள­னிக்கு வந்­த­போது இம்­ம­லையைத் தரி­சித்து கால்­ப­தித்த­தாக பௌத்­தர்கள் நம்­பிக்கை வைத்து தமது புனித பிர­தே­ச­மாக கருதி இம்­ம­லையை தரி­சித்து வரு­கி­றார்கள்.
கிறிஸ்­த­வர்கள் ஆதத்தின் சிகரம் என்ற பொருள்­பட இம்­ம­லையை Adams Peak என்­ற­ழைக்­கி­றார்கள். எமது இஸ்­லா­மிய வர­லாறு ஆதம் (அலை) அவர்­களைப் பற்­றிய கதை­களைத் தெரி­வித்­துள்­ளது.
ஆதம் (அலை), ஹவ்வா (அலை) இரு­வரும் சுவ­ன­லோ­கத்தில் இருந்­த­போது இவர்கள் மீது பொறா­மைப்­பட்ட இறை சாபத்­துக்­குள்­ளான இப்லீஸ் ஆதம் (அலை) யை வழி­கெ­டுக்க எண்ணி சுவ­னத்­தினுள் நுழைந்தான். ஆதம் (அலை) யை அணுகி தடுக்­கப்­பட்ட மரத்தின் கனியை அவர் உண்ண வைக்க முயற்­சித்தான். ஆதம் (அலை) கனியை உண்ண மறுத்த போது இப்லீஸ் கனியை ஹவ்வா (அலை) புசிக்க வைத்தான். பின்பு ஹவ்வா (அலை) மூலம் ஆதம் (அலை) யும் கனியைச் சாப்­பிட்டார். இதனால் கோப­முற்ற அல்லாஹ் அவர்கள் இரு­வ­ரையும் சுவர்க்­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றினான்.
சுவர்க்­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட ஆதம்(அலை) இலங்­கையின் பாவா ஆதம் மலை உச்­சியில் கால்­ப­தித்து நீண்­ட­காலம் அழுது மன்­றா­டி­ய­தாக வர­லாறு தெரி­விக்­கி­றது. பின்னர் அல்­லாஹ்வால் மன்­னிக்­கப்­பட்டு இலங்­கை­யி­லி­ருந்து கால் நடை­யாக மக்கா சென்று அரபா மைதா­னத்தில் ஹவ்வா(அலை) யை சந்­தித்தார். பின்பு இலங்கை திரும்பி வாழ்ந்­த­தா­கவும் வர­லாறு தெரி­விக்­கி­றது.
மலையை அண்­மித்த பகு­தியில் ஹோட்டல்?

சிவ­னொ­ளி­பாத மலையை அண்­மித்த பகு­தியில் மத்­தி­ய­கி­ழக்கு நாட்டைச் சேர்ந்த முத­லீட்­டா­ளரால் ஹோட்டல் ஒன்று நிர்­மா­ணிக்கும் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­வ­தாக சிலர் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் தமது எதிர்ப்­பு­களை வெளி­யிட்­டுள்­ளனர். சிவ­னொ­ளி­பா­த­மலை (ஸ்ரீபாத) பௌத்­தர்­க­ளுக்கே சொந்­த­மா­னது. முஸ்­லிம்­களை அப்­ப­கு­தியில் ஹோட்டல் நிர்­மாணம் என்ற போர்­வையில் குடி­ய­மர்த்த முயற்­சிக்­கின்­றனர் என்று குற்றம் சுமத்­து­கின்­றனர்
பொது­ப­ல­சேனா அமைப்பும் ஊடக மாநா­டொன்­றினை நடத்தி பலத்த கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ளது. ஹோட்டல் நிர்­மா­ணப்­ப­ணி­களை உடன் நிறுத்தும் படியும் கோரி­யுள்­ளது. பொது­ப­ல­சேனா ஹோட்டல் நிர்­மாணம் தொடர்­பாக சில விப­ரங்­க­ளையும் வெளி­யிட்­டுள்­ளது. பொது­ப­ல­சேனா அமைப்பு வெளி­யிட்­டுள்ள விப­ரங்கள் பின்­வ­ரு­மாறு அமைந்­துள்­ளன.
அம்­ப­க­முவ பிர­தேச சபை அதி­கார எல்­லைக்­குட்­பட்ட நல்ல தண்ணி பொலிஸ் பிரிவில் மரே கிரா­ம­சேவை பிரிவில் உள்ள பீக்பீல்ட் தோட்­டத்தில் ஹோட்டல் ஒன்று நிர்­மா­ணிப்­ப­தற்­காக தற்­போது களஞ்­சி­ய­சா­லைகள் அமைக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்தக் காணி 83 ஏக்கர் 2 ரூட் ஆகும். இந்த தோட்­டத்தின் முகா­மை­யா­ள­ராக வெலி­ம­டையில் வசிக்கும் தில்சான் சேனா­ரத்ன கட­மை­யாற்­று­கிறார்.
இந்த தோட்­டத்தின் உரிமை அபு­தாபி நாட்டைச் சேர்ந்த ஒரு நிறு­வ­னத்­துக்கு உள்­ளது. Abudhabi Capital Group எனும் பெயரைக் கொண்­ட­தாகும். இந்த நிறு­வனம் Al Ain Properties எனும் நிறு­வ­னத்­துடன் இணைந்து இலங்­கையில் காணிகள் கொள்­வ­னவு செய்யும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
எடி­சலாட் நிறு­வ­னத்­துக்கு தொடர்­பில்லை

சிவ­னொ­ளி­பா­த­மலை காணி விவ­கா­ரத்­துடன் மத்­தி­ய­கி­ழக்கு நாட்டு தொலைத் தொடர்­பாடல் சேவை வழங்­கு­ந­ரான எடி­சலாட் நிறு­வ­னத்­துக்கும் தொடர்­பி­ருப்­ப­தா­கவும் அந்­நி­று­வ­னத்தின் சேவை­களைப் பகிஷ்­க­ரிக்­கு­மாறும் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் செய்­திகள் பரப்­பப்­பட்­டன. இந்­நி­று­வனம் இதனை முற்­றாக மறுத்­துள்­ளது. குறிப்­பிட்ட ஹோட்டல் நிர்­மா­ணிக்­க­வுள்­ள­தாகக் கூறப்­படும் நிறு­வ­னத்­துக்கும் எடி­ச­லாட்­டுக்கும் எந்த சம்­பந்­த­மு­மில்லை எனத் தெரி­வித்­துள்­ளது.
குறித்த காணியைக் கொள்­வ­னவு செய்­த­தாகக் கரு­தப்­படும் சுயா­தீன முத­லீட்­டா­ளர்கள் குழு ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­லி­ருந்து அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்­தது.
அவர்கள் இலங்­கையில் தங்­கி­யி­ருந்த காலப்­ப­கு­தியில் தொலை­தொ­டர்­பாடல் சேவை­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக எடி­சலாட் லங்­கா­விடம் கோரிக்கை விடுத்­தனர்.
அதற்­கி­ணங்க சிவ­னொ­ளி­பாத மலை­யி­லி­ருந்து சுமார் 13 கிலோ­மீற்றர் தொலைவில் தற்­கா­லிக வலை­ய­மைப்பு கோபுரம் ஒன்றை நிறுவி அத­னூ­டாக அவர்­க­ளுக்கு தொலை­தொ­டர்­பாடல் சேவை­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மாத்­தி­ரமே எடி­சலாட் மேற்­கொண்­டி­ருந்­த­தாக தெரி­வித்­துள்­ளது.
நல்­ல­தண்ணி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு

சிவ­னொ­ளி­பாத மலை­ய­டி­வா­ரத்தில் பாரி­ய­ள­வி­லான உல்­லாசப் பய­ணத்­துறை ஹோட்­ட­லொன்று நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக செய்­திகள் பர­வி­ய­தை­ய­டுத்து மக்­க­ளி­டையே பாரிய அதி­ருப்தி ஏற்­பட்­டுள்­ளது. மலை­ய­டி­வா­ரத்தில் ஹெலி­கொப்டர் ஒன்றில் வந்­தி­றங்­கிய அரே­பி­யர்கள் சிலர் அப்­ப­கு­தியில் மேற்­கொண்ட ஆராய்ச்­சிகள் தொடர்­பான புகைப்­ப­டங்கள், செய்தி இணையத்­த­ளங்­க­ளிலும் சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளிலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.
ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தைச் சேர்ந்த அர­பி­களே குறித்த பகு­திக்கு ஹெலி­கொப்­டரில் சென்று ஆராய்ச்­சி­களில் ஈடு­பட்­டுள்­ள­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஹெலி­கொப்டர் ‘மரே’ தோட்­டத்­திலே தரை இறங்­கி­யுள்­ளது.
இது நல்­ல­தண்ணி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்­ட­தாகும். ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தைச் சேர்ந்­த­வர்கள் தரை­யி­றங்­கிய பிர­தேசம் பிர­பல அமைச்சர் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான காணி­யெ­னவும் அவர் அக்­கா­ணியை ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தைச் சேர்ந்த நிறு­வ­ன­மொன்­றுக்கு விற்­பனை செய்­துள்ளார் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பிட்ட அமைச்சர் பாரிய ஹோட்டல் ஒன்­றினை நிறு­வவே காணியை கொள்­வ­னவு செய்து அதை அரபு நாட்­ட­வ­ருக்கு விற்­பனை செய்­துள்ளார் எனவும் கூறப்­ப­டு­கி­றது.
தற்­போது ஹோட்டல் நிர்­மாண ஆரம்பப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அதற்­கா­கவே அரபு நாட்­ட­வர்கள் இங்கு வருகை தரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. தமி­ழர்­களும் சிங்­க­ள­வர்­களும் பெரு­ம­ளவில் வழி­பட்டு வரும் இப்­பு­னித பூமியின் வர­லாற்றை இல்­லாமற் செய்து புதிய வர­லாற்றை உரு­வாக்கும் முக­மா­கவே இத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.
மவு­சா­கலை நீரேந்தும் பிர­தே­சத்தை அழி­வுக்­குட்­ப­டுத்தும் இந்த வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க ஒரு போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என பிர­தேச மக்கள் தெரி­விக்­கி­றார்கள். இது தொடர்­பாக நல்­ல­தண்ணி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டு­களை பதிவு செய்­துள்­ளனர்.
சிவ­னொ­ளி­பா­த­மலை உச்­சி­யி­லி­ருந்து 6 கிலோ மீற்றர் தொலைவில் மரே நீர்­வீழ்ச்­சியை அண்­மித்­த­தாக இந்த ஹோட்டல் நிர்­மா­ணிக்க உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது. பீக்பீல்ட் என்ற தனியார் தேயிலைத் தோட்­டத்தில் தங்கும் விடு­தி­யொன்று நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தற்­காக அனு­மதி பிர­தேச சபை­யிடம் கோரப்­பட்­டி­ருந்­தது.
அதற்­கான ஆவ­ணங்கள் அனைத்தும் சரி­யான முறையில் இருந்­ததால் பிர­தேச சபை அவ்­வி­டு­தியை அமைக்க அனு­மதி வழங்­கி­ய­தாக அம்­ப­க­முவ பிர­தேச சபையின் செய­லாளர் ஏ.சர­வ­ண­பவன் தெரி­வித்­துள்ளார். தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வ­னமும் இதற்­கான அனு­ம­தியை வழங்­கி­யுள்­ளது.
சிவ­னொ­ளி­பாத மலை விகா­ரா­தி­பதி

சிவ­னொ­ளி­பாத மலை புனித பூமிக்குள் எந்­தவோர் உல்­லாசப் பயண ஹோட்­ட­லொன்றும் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­மாட்­டா­தெ­னவும் சிவ­னொ­ளி­பாத மலை­ய­டி­வா­ரத்­திலே தங்கும் விடு­தி­யொன்­றினை அமைப்­ப­தற்­கான அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தென்றும் சிவ­னொ­ளி­பா­த­மலை விகா­ரா­தி­பதி பெங்­க­முவே ஸ்ரீ தம்­ம­திஸ்ஸ தேரர் தெரி­வித்­துள்ளார்.
புனித பூமி பிர­தே­சத்­துக்குள் ஹோட்டல் நிர்­மா­ணிக்க ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அதனால் அதனை நிர்­மா­ணிக்க வேண்­டா­மென்று தடுப்­ப­தற்­கு­ரிய அதி­காரம் தனக்கு இல்லை எனவும் அவர் தெரி­வித்தார்.
பொது­ப­ல­சே­னாவின் குற்­றச்­சாட்டு

ஹோட்டல் நிர்­மாணம் தொடர்­பாக பொது­ப­ல­சேனா அமைப்பு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்­றினை நடத்­தி­யது மாநாட்டில் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கண்­ட­னங்­களை வெளி­யிட்­ட­துடன் இதற்கு கடும் எதிர்ப்­பினையும் வெளி­யிட்டார்.
அபு­தாபி கெப்­பிட்டல் குரூப் என்ற நிறு­வனம் பீக்வீல் தோட்­டத்தில் ஹோட்டல் ஒன்­றினை நிர்­மா­ணிப்­ப­தற்­காக 83 ஏக்கர் 2 ரூட் காணியை கொள்­வ­னவு செய்­துள்­ளது. தற்­போது களஞ்­சி­ய­சா­லையும் விமானம் இறங்கு தளமும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. இங்கு ஹோட்டல் நிறு­வப்­பட்டால் அது எமது பௌத்த கலா­சா­ரத்­தையும் பௌத்த வர­லாற்­றையும் அழி­வுக்­குட்­ப­டுத்தும்.
சிவ­னொ­ளி­பாத மலை­யி­லி­ருந்து 5 கிலோ மீற்றர் தூரத்­திலே இந்த ஹோட்டல் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த ஹோட்­ட­லுக்கு அர­பிகள் வந்து தங்கி சிவ­னொ­ளி­பா­த­மலை கூர­கலை போன்ற இடங்­களைத் தரி­சிப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இதனால் இப்­ப­கு­தியில் அரபு கலா­சா­ரமும் அரபு குடி­யேற்­றமும் உரு­வாகும். அதனால் இந்தத் திட்­டத்­துக்கு அர­சாங்கம் தடை­வி­திக்க வேண்டும்.
இந்த ஹோட்டல் நிர்­மா­ணத்தின் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் யார்? எந்த நோக்­கத்­துக்­காக சிவ­னொ­ளி­பாத மலைக்­க­ருகில் ஹோட்டல் அமைக்க வேண்டும்? அபு­தாபி நிறு­வ­னத்­துடன் உடன்­ப­டிக்­கைகள் செய்­து­கொண்­ட­வர்கள் யார்?
இதற்கு அனு­மதி வழங்­கி­ய­வர்கள் யார்? என்­பன பற்றி அர­சாங்கம் விசா­ரணை நடத்த வேண்டும் என கல­கொட அத்தே ஞான­சார தேரர் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.
பைசர் முஸ்­த­பாவை கைது செய்க

மத்­திய கிழக்கு நாடு­களில் வாழும் அர­பிகள் இலங்­கையில் காணி கொள்­வ­னவு செய்து வரு­கி­றார்கள். அபு­தாபி, கட்டார், ஐக்­கிய அரபு இராச்­சியம் உட்­பட மத்­திய கிழக்கு நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் இங்கு காணி கொள்­வ­னவில் ஈடு­பட்­டுள்­ளார்கள். இதன் பின்­ன­ணியில் மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா இருக்­கிறார். அவரை அர­சாங்கம் கைது செய்து விசா­ரணை நடத்த வேண்டும்.
முஸ்லிம் அமைச்­சர்கள் எந்த அர­சாங்கம் வந்­தாலும் அந்த அர­சாங்­கத்­துடன் ஒட்­டிக்­கொள்­கி­றார்கள். அன்று மஹிந்­த­வுடன் இருந்­த­வர்கள் இன்று மைத்­தி­ரியின் மடியில் இருக்­கி­றார்கள். ஜே.வி.பி.ஆட்­சி­ய­மைத்­தாலும் அவர்­க­ளுடன் சேர்ந்து கொள்­வார்கள் என்றும் ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.
கூர­கலை புனி­த­பூமி, முகுது மகா­வி­காரை பூமி, சோமா­வதி பூமி, தல­தா­மா­ளிகை புனித பூமி, தெவ­ன­கல புனித பூமியை ஆக்­கி­ர­மித்­துள்ள முஸ்­லிம்கள் தற்­போது ஸ்ரீபாத (சிவ­னொ­ளி­பாத மலை) புனித பிர­தே­சத்­தையும் ஆக்­கி­ர­மிக்க முயற்சி செய்­கி­றார்கள். இதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் அவர் சூளு­ரைத்­துள்ளார்.
மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை ஆய்வு

சிவ­னொ­ளி­பாத மலை­ய­டி­வா­ரத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் ஹோட்டல் தொடர்பில் கண்­ட­றி­வ­தற்­காக மத்­திய சுற்­றாடல் அதி­கா­ர­ச­பையின் அதி­கா­ரிகள் குழு­வொன்று கடந்த 31 ஆம் திகதி அப்­ப­கு­திக்குச் சென்று ஆய்­வு­களில் ஈடு­பட்­டது.
அம்­ப­க­முவ பிர­தேச சபையின் அதி­கா­ரத்­துக்­குட்­பட்ட மவு­சா­கலை நீரேந்துப் பிர­தே­சத்தின் மரே தோட்­டப்­ப­கு­தியில் அதி­கா­ரிகள் குழு விசா­ர­ணை­களை நடத்­தி­னார்கள். இத்­திட்டம் கார­ண­மாக சிவ­னொ­ளி­பா­த­மலை வனப் பிர­தேசம் உள்­ளிட்ட அதனைச் சுற்­றி­யுள்ள பிர­தேசம் சூழ­லியல் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­ளுமா என்று ஆராய்ந்­தார்கள்.
மத்­திய சுற்­றாடல் அதி­கார சபையின் ஆய்­வி­னை­ய­டுத்து சிவ­னொ­ளி­பாத மலைக்குச் செல்லும் பக்­தர்­களைக் கவரும் வகையில் நல்­ல­தண்ணி பீக்பீல்ட் தோட்­டத்தில் ஓய்­வு­வி­டுதி (ஹோட்டல்) ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. ஹோட்டல் நிர்­மா­ணிப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்ள இடத்தைக் கண்­கா­ணித்­ததன் பின்­னரே இத்­தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
மவு­சா­கலை நீர்த்­தேக்­கத்­துக்கு மேலாக மரே நீர்­வீழ்ச்­சிக்கு அண்­மையில் உள்ள தோட்­டத்­துக்கு சொந்­த­மான ஓய்வு விடு­தி­யொன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்றாலும் இந்த தோட்டம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வலயத்துக்கு உட்பட்டது அல்ல என்று நல்லதண்ணி வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பௌத்த– முஸ்லிம் விரிசலை ஏற்படுத்த சதி

சிவ­னொ­ளி­பாத மலை பிர­தே­சத்தில் ஹோட்டல் ஒன்று நிர்­மா­ணிக்கும் விவ­காரம் தொடர்­பான விமர்­ச­னங்கள் பெளத்த – முஸ்லிம் விரி­சலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான சதி முயற்­சி­யென அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.
சிவ­னொ­ளி­பா­த­மலை வளா­கத்தில் எந்­த­வி­த­மான கட்­ட­டங்­களும் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வில்லை. எந்த ஹோட்­டலும் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வில்லை எனவும் இது பௌத்­தர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையில் விரி­சலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான பொய்ப் பிர­சாரம் எனவும் ஊட­கத்­துறை பிர­தி­ய­மைச்சர் கரு பர­ண­வி­தா­ரன தெரி­வித்­துள்ளார்.
சிவ­னொ­ளி­பாத மலை புனித பிர­தேசம் 99 ஏக்­கர்­களைக் கொண்­ட­தாகும். அப்­ப­கு­திக்குச் செல்லும் வழியில் 88 ஏக்­கர்­களைக் கொண்ட தனியார் நிலம் ஒன்று இருக்­கி­றது. அதில் ஏற்­க­னவே இருந்த கட்­டத்தை தற்­போது விடு­முறை விடு­தி­யாக மாற்­று­வ­தற்கு அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது. அதற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.
அந்த கட்டட வேலை­களே தற்­போது நடை­பெ­று­கின்­றன. அதிலும் சுற்­றாடல் தொடர்­பான ஒரு பிரச்­சினை எழுப்­பப்­பட்­டுள்­ளது. அது தொடர்­பாக நாம் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கிறோம்.
மாறாக சிவ­னொ­ளி­பாத புனித தல வளா­கத்தில் ஹோட்டல் அமைக்­கப்­ப­ட­வில்லை. எனினும் ஒரு தரப்பினர் நாட்டில் மதவிரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
எது எப்­ப­டி­யி­­­­ருப்­பினும் இந்த விவ­காரத்தை இலங்கை முஸ்­லிம்­களுடன் தொட­ர்­பு­ப­டுத்தி முஸ்­லிம்கள் இந்த நாட்டைப் பிடிக்­கி­றார்கள் என பெரும்­பான்மை மக்களை திசை திருப்­பு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.
குறித்த ஹோட்டல் நிர்­மாணப் பணி­களில் முத­லீடு செய்­துள்­ள­வர்கள் வெளிநாட்­ட­வர்­களே அன்றி இலங்கை முஸ்­லிம்கள் அல்ல. அபு­தாபி வர்த்­த­கர்கள் இலங்­கையின் முன்னாள் அமைச்சர் ஒரு­வரின் உத­வி­யு­ட­­னேயே இதில் முத­லிட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது. அத்­துடன் அர­சாங்­கத்தின் உரிய அனு­ம­தி­க­ளையும் அவர்கள் பெற்­றுள்­ளதாக கூறப்­ப­டு­கி­றது. அப் பகுதி விகா­ரா­தி­ப­தியும் இந்த ஹோட்டல் புனித தல பகு­திக்குள் வர­வில்லை என உறு­திப்­ப­­டுத்­தி­யு­ள்ளார்.
இந்த ஹோட்டல் அமை­வதால் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எந்தப் பலனும் ஏற்­படப் போவ­தில்லை. இங்கு வந்து ஹோட்டல் அமைக்­கு­மாறு இந்த நாட்டு முஸ்­லிம்கள் அபு­தாபி வியா­பா­ரி­க­ளிடம் கோரிக்கை விடுக்­க­வு­மில்­லை.
இதனை அமைக்க வேண்­டுமா இல்­லையா என்­பதை அர­சாங்­கமும் அதி­கா­ரி­க­ளுமே தீர்­மா­னிக்க வேண்டும். தேவை­யில்லை என்றால் அதற்கான அனு­ம­தியை அர­சாங்கம் இரத்துச் செய்­யலாம். இதனால் முஸ்­லிம்­க­ளுக்கு எந்தப் பிரச்­சி­னை­யு­மில்­லை.
ஒரு வெளிநாட்டு வியா­பார நிறு­வ­னத்­திற்கும் இலங்­­கையின் முத­லீட்­டா­ளர்கள் மற்றும் காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளுக்­கு­மி­டை­யி­லா­ன விவ­கா­ரத்தை இலங்­கை முஸ்­லிம்­க­ளி­­னு­டை­ய­தாக பூதா­க­ர­மாக்கி பெரும்­பான்மை சிங்­கள மக்­களை தவ­றா­க வழி­ந­டாத்தும் வேலையை இந்த இன­வாத சக்­திகள் கைவிட வேண்டும் என்­ப­தை இங்கு வலி­யு­றுத்த விரும்­பு­கி­றோம்..

Comments