தேசிய மட்டத்தில் முகம்மது ஜெஸ்மித் சாதனை

முஸ்லிம் கலாசார அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய மீலாத்து நபி விழாப் போட்டிகள் சனிக்கிழமை 5 ஆம் திகதி கொழும்பு மருதானை பாத்திமா மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது.

இப்போட்டியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றிய கிண்ணியா தி /தாருல் உலூம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த முகம்மது நஸிர் முகம்மது ஜெஸ்மித் எனும் மாணவன் கிராஆத் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை பெற்றுள்ளார்

இவர் கடந்த வருடமும் அல் குர் ஆன் மனன போட்டியில் தேசிய மீலாத்து நபி விழா போட்டியில் முதல் இடத்தைப் பெற்றிருந்தார்.

இவர் தரம் 7 இல் கல்வி கற்கும் இம்மாணவன் கடந்த வாரம் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைக்குகிடையில் இடம் பெற்ற மீலாதுன் நபி விழா போட்டியில் முதலிடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ihzana fareed

Comments