Skip to main content

தம்புள்ளையில் வீடொன்றில் புகுந்து மர்ம நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகம்



தம்புள்ளை கல்கிரியாகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிசுச்சூடு சம்பவத்தில் நபரொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அவரது வீட்டில் இருந்தபோது  துப்பாக்கிப்பிரயோகம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 46 வயது நபர் ஒருவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையின்  தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் துப்பாக்கிச்சூட்டை நடத்திய மர்ம நபர் தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

Comments