இலங்கைக்கு கடனுதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

இலங்கையில் சிறுநீரக நோய் அவதானம் காணப்படும் மாவட்டங்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி வழங்கவுள்ளது.

இலங்கைக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது.இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று நிதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய் குறித்த அவதானம் அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, புத்தளம் மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் காணப்படுகின்றது.

குறித்த மாவட்டங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவே இந்த கடனுதவி அளிக்கப்படுகின்றது.

Comments