கிரிக்கட் மென்பந்து சுற்றுப் போட்டிகிண்ணியா பொலிஸ் தலைமையில் ஆரம்பம்

இலங்கை பொலிஸ் சேவையின் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் மக்கள் பொலிஸ் குழுவினால் இன்றும் நாளையும் (28,29) மென்பந்து கிரிக்கட் சுற்று போட்டிகஇடம் பெற உள்ளது.

இன்று (28) கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு விஜயசிரி ஆரம்பித்து வைத்தார்இதில் மொத்தமாக 28 அணிகள் பங்கு பற்ற உள்ளதுடன் கிண்ணியா அல் இர்பான் பாடசாலை மைதானத்தில் போட்டிகள் யாவும் இடம் பெற உள்ளனஒவ்வொரு அணியிலும் அறுவர் பங்கு பற்ற முடியும் எனவும் இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிக்கு பெறுமதியான பணப்பரிசும் கேடயமும் வழங்கப்படவுள்ளதாகவும் மக்கள் பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி புரோஜன் பாலச்சந்திரன் தெரிவித்தார்

ihzana fareed

Comments