பாரவூர்த்தி – இரண்டு வாகனங்களுடன் மோதி விபத்து!
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் பாரவூர்த்தி ஒன்று கொட்டகலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறி மீதும், கார் மீதும்மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மூன்று வாகனங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பாரவூர்த்தியின் சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் பகுதியினை நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி ஒன்றே இவ்வாறுவிபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளாகிய நேரத்தில் மோதுண்ட இரு வாகனங்களிலும் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.


Comments
Post a Comment