நல்லாட்சி அரசிடம் நிர்வாக திறன் இல்லை !

தற்போதைய அரசாங்கத்திடம் உரிய நிர்வாகத் திறன் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே தமது அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் தனியார் துறைக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments