நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை.!

வங்­காள விரி­கு­டாவில் நிலை­கொண்­ டுள்ள காற்­ற­ழுத்தம் கார­ண­மாக நாட் டின் பல பாகங்­களில் அடைமழை பெய்­யக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­வ­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் வெளி­யிட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

வங்­காள விரி­கு­டாவில் நிலை­கொண்­டுள்ள காற்­ற­ழுத்தம் நிலை­மை­யா­னது இலங்­கையின் தென்­கி­ழக்கு திசை நோக்கி நகர்ந்­து­வ­ரு­வதால் நாட்டின் பல பாகங்­க­ளிலும் குறிப்­பாக, மத்­திய மாகாணம், மேல் மாகாணம், சப்­ர­க­முவ மாகாணம், கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் இடி­யுடன் கூடிய மழை­பெய்­யக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் இருக்­கின்­றன. மேலும் நாட்டின் கரை­யோர பிர­தே­சங்­க­ளிலும் மேற்­கு­றிப்­பிட்ட மாகா­ணங்­க­ளிலும் கடும் காற்று (100மி.மீ.மேல்) வீசக்­கூ­டு­மென்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது என்றும் குறித்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது

நாட்டில் தொடர்ந்து பெய்­து­வரும் அடை மழை­யினால் அதிக மழை வீழ்ச்சி உள்­ஹிட்­டி­யவில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தோடு கடந்த 72 மணித்தியால நேரத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 167.6மி.மீ மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments