மரை இறைச்சியுடன் ஒருவர் கைது

திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் வீட்டில் மரை இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த வேளை 16 கிலோ மறை இறைச்சியுடன் சந்தேக நபொருவரை இன்று (03) காலை கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொறவெவ டி-01 பகுதியைச்சேர்ந்த கோபால் இலிங்கராஷா (52 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மிருகங்களை வேட்டையாடி வீட்டில் மறை இறைச்சியை விற்பனை செய்து வருவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 வழங்கிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது 16 கிலோ இறைச்சி மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Comments