அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு!

அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் இன்று (02) முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் பலவற்றுக்கு தீர்வு கிட்டாததனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேவை யாப்பு தயாரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடாத்தியும் தீர்வு கிட்டாததனால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமககே தெரிவித்துள்ளார்.

முன்னர் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அதிகாரிகளின் வாக்குறுதியினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததனால் இன்று முதல் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Comments