சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் உயிரிழந்தார் ; காரணம் வெளியாகியது

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் இளையமகளான சன்ஜீவனி இந்திரா 40 வயதில் இலண்டனில் வைத்து இன்று காலமானார்.

இவர் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் இரு குழந்தைகளின் தாயாவார்.

Comments