வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

நாட்டின் பல பாகங்களில் கடுமையான மழை பொழிய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளது.

அதற்கமைய சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என்பதுடன் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களத்தின் நிபுணர் உதேனி வீரசிங்க மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments