லொறி மோதியதில் 12 வயது சிறுவன் படுகாயம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதி மத்திய கல்லூரி சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று  மதியம் ஒரு மணியவில் குறித்த விபத்துச்  சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்துள்ள சிறுவன் துவிச்சக்கர வண்டியுடன் பிரதான வீதியினை கடக்க முற்பட்ட போது சிறிய ரக லொறி ஒன்று சிறுவன் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது
இதில் படுகாயமடைந்த சிறுவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Comments