1800 கோடி ரூபா எங்கே...?

2015 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியில் இருந்து ஆயிரத்து 800 கோடி ரூபா வெளியில் அனுப்பபட்ட விதம் சம்பந்தமாக விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கியில் இருந்து எப்படி பணம் அனுப்பபட்டது, யாருக்கு இடையில் இந்த பணம் பரிமாறிக்கொள்ளப்பட்டது என்பன குறித்து இந்த விசாரணையில் தேடி கண்டறியப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பன இந்த விசாரணைகளை நடத்தவுள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.

Comments