6500 அரசாங்க பஸ்கள் சேவையில் : 20 பஸ்கள் மீது தாக்குதல் : பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சம்­மே­ளனம்  பணிப்­ப­கிஸ்­க­ரிப்பை மேற்கொண்டுள்ளதையடுத்து இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான 6500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கேகாலை மற்றும் அவிசாவளை உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் சேவையில் ஈடுபட்டிருந்த 20 அரசாங்க பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
மேலும் பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரிடம் இலங்கை போக்குவரத்துச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Comments