பர்தாவை கழற்றிவிட்டு பரீட்சை எழுத நிர்ப்பந்திக்கப்படுகிறோம்
மட்டக்குளியில் மாணவிகள் தெரிவிப்பு
பர்தாவை கழற்றி மேசையில் வைத்துவிட்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை எழுத நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என மட்டக்குளி டிலசல் ஆண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றும் 10 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்குழியைச் சோந்த 10 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் வெளிவாரியாக பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
இதுவரை 5 நாட்களாக நடைபெற்ற பரீட்சையின்போது மண்டபத்திற்குள் தங்களது தலையில் அணியும் பர்தாவை கழற்றி மேசையில் வைத்து விட்டே பரீட்சை எழுத கடமையில் இருக்கும் அதிகாரிகளால் நிர்ப்பந்திப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
பரீட்சை நிலையத்தின் கடமையுள்ள பிரதான பரிசோதகரே இதனைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தினார். கொழும்பு - 15 டிலசல் ஆண்கள் கல்லுாரியிலேயே பரீட்சைக்கு தோற்றும் சகல முஸ்லிம் மாணவிகளும் இவ்வாறு நிர்பந்திக்கப்படுகின்றனர்.
குறித்த மண்டபத்திற்குள் ஆண்மாணவர்கள் இருப்பதனால் தாம் அசெளகரியம் ஏற்படுவதாகவும் பரீட்சை எழுதும் மனநிலை அற்றுப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சர் பைசர் முஸ்தபாவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு அவர் சம்பந்தப்பட்ட பரீட்சை ஆணையாளர், கல்வியமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
ஏற்கனவே கல்வியமைச்சா் இதனை அறிவித்து கல்வியமைச்சோ பரீட்சைத் திணைக்களமோ தமது பரீட்சை பரிசோதகர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கவில்லை. இப்பிரச்சினைகள் ஒரு சில இடங்களிலேயே நடைபெற்றுள்ளது.
பர்தாவுக்குள் பிரதிகளை வைத்துக் கொண்டு பார்த்து எழுதலாம் என்ற ரீதியிலே பரிசோதகர் இதனைக் கருதுகின்றனர். இவ்விடயம் சம்பந்தமாக தான் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
பர்தாவை கழற்றி மேசையில் வைத்துவிட்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை எழுத நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என மட்டக்குளி டிலசல் ஆண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றும் 10 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்குழியைச் சோந்த 10 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் வெளிவாரியாக பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
இதுவரை 5 நாட்களாக நடைபெற்ற பரீட்சையின்போது மண்டபத்திற்குள் தங்களது தலையில் அணியும் பர்தாவை கழற்றி மேசையில் வைத்து விட்டே பரீட்சை எழுத கடமையில் இருக்கும் அதிகாரிகளால் நிர்ப்பந்திப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
பரீட்சை நிலையத்தின் கடமையுள்ள பிரதான பரிசோதகரே இதனைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தினார். கொழும்பு - 15 டிலசல் ஆண்கள் கல்லுாரியிலேயே பரீட்சைக்கு தோற்றும் சகல முஸ்லிம் மாணவிகளும் இவ்வாறு நிர்பந்திக்கப்படுகின்றனர்.
குறித்த மண்டபத்திற்குள் ஆண்மாணவர்கள் இருப்பதனால் தாம் அசெளகரியம் ஏற்படுவதாகவும் பரீட்சை எழுதும் மனநிலை அற்றுப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சர் பைசர் முஸ்தபாவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு அவர் சம்பந்தப்பட்ட பரீட்சை ஆணையாளர், கல்வியமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
ஏற்கனவே கல்வியமைச்சா் இதனை அறிவித்து கல்வியமைச்சோ பரீட்சைத் திணைக்களமோ தமது பரீட்சை பரிசோதகர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கவில்லை. இப்பிரச்சினைகள் ஒரு சில இடங்களிலேயே நடைபெற்றுள்ளது.
பர்தாவுக்குள் பிரதிகளை வைத்துக் கொண்டு பார்த்து எழுதலாம் என்ற ரீதியிலே பரிசோதகர் இதனைக் கருதுகின்றனர். இவ்விடயம் சம்பந்தமாக தான் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.


Comments
Post a Comment