மருதமுனை நூலகத்திற்கு ஆசியா பவுண்டேஷனினால் நூல்கள் அன்பளிப்பு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பொது நூலகத்திற்கு ஆசியா பவுண்டேஷன் ஒரு தொகுதி நூல்களை கடந்த 8ம் திகதி அன்பளிப்புச் செய்திருந்தது.
மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின்(SESEF) வேண்டு கோளின் பேரில் ஆசிய மன்றத்தின் திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம். வலீத் , நூலகர் திருமதி நஸ்லியா உமர்கத்தா அவர்களிடம் கையளித்தார்.
உயர்தர பிரிவு மாணவர்களுக்கான கடந்த கால வினா விடைகள் அடங்கிய (தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளும் உள்ளடங்கலாக) புத்தகங்களும் வழங்கப் பட்டிருப்பது முக்கிய விடயமாகும்.

Comments