மாளிகாவத்தை மையவாடிவிவகாரம்: கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

கொழும்பு – மாளி­கா­வத்தை மைய­வாடிக் காணியை ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து பாது­காத்துக் கொள்­வ­தற்­கா­கவும் மீட்­டெ­டுத்துக் கொள்­வ­தற்­கா­கவும் இன்று வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையின் பின்பு கொழும்பு மாந­கர சபை கட்­ட­டத்­துக்கு முன்னால் ஆர்ப்­பாட்­ட­மொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.


நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி தனியார் நிறு­வ­ன­மொன்று முஸ்லிம் மைய­வாடிக் காணியில் 8 மாடிக் கட்­ட­ட­மொன்று நிர்­மா­ணித்து வரு­கின்­றமை, மைய­வா­டிக்­க­ருகில் உள்ள மின்­மாற்­றியை மைய­வாடிக் காணிக்குள் நிறு­வு­வ­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டுள்­ளமை, மாந­கர சபை­யினால் சட்ட விரோதக் கட்­ட­டத்­துக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கு வாபஸ் பெறப்­பட்­டமை என்­ப­வற்­றிற்கு எதி­ராக இன்று இந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.கொழும்பு மாந­க­ர­சபை ஆணை­யாளர் வி.கே.ஏ.அநு­ர­வுக்கு எதி­ரான இந்த ஆர்ப்­பாட்­டத்தை மாளி­கா­வத்தை மஸ்ஜித் சம்­மே­ளனம் ஒழுங்கு செய்­துள்­ளது.ஆர்ப்­பாட்டம் ஜும்ஆ தொழு­கையின் பின்பு தெமட்டஹக ஜும்ஆ பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து ஆரம்­ப­மாகி கொழும்பு மாந­கர சபை கட்டடத்தை சென்றடையவுள்ளதாக மாளிகாவத்தை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஷியாம் அசார் தெரிவித்தார்.  


Comments