இன மோதல்­களை ஏற்­ப­டுத்­த முனையும் தேரரை கைது செய்­யாது அழைத்துப் பேசு­வ­தா­னது வெட்­க­த்திற்­கும் வேத­னைக்கு­மு­ரி­ய­து

பாரா­ளு­மன்றில் அமைச்சர் ரிஷா­த் பதி­யு­தீன்
முஸ்லிம் சிங்­கள மோதல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முனைந்து கொண்­டி­ருக்கும் பௌத்த தேரரை கைது செய்­யாது அழைத்துப் பேசு­வ­தா­னது வெட்­க­மா­னதும் வேத­னை­யா­ன­து­மான செய­லாகும் என அமைச்சர் ரிசாத்  பதி­யுதீன்  சபையில் தெரி­வித்தார்.
இந்த நாட்டில் இரண்டு சட்­டங்கள் காணப்­ப­டு­கின்­றதா எனக் கேள்­வி­யெ­ழுப்­பிய அமைச்சர் ரிசாத், தெஹி­வளை பள்­ளி­வாசல் கட்­டடம் இடிக்­கப்­ப­டு­மென விடுத்­துள்ள அறி­விப்பு அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயல் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை புத்­த­சா­சன அமைச்சு சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்தி கிறிஸ்­தவ சமய அலு­வல்கள் அமைச்சு, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சு ஆகி­ய­வற்றின் செலவுத் தலைப்­புகள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
தெஹி­வளை பள்­ளி­வாசல் விடயம் தொடர்ந்தும் பிரச்­சி­னை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் இந்தக் கட்­டடம்  சட்­ட­வி­ரோ­த­மா­னது என்றும் நிர்­மா­ணப்­ப­ணிகள் இடம்­பெற்றால் உடைப்போம் என எச்­ச­ரிக்கை கடிதம் அனுப்­பப்­பட்­டுள்­ளது. தெஹி­வளை பள்­ளி­வா­சலும் மத்­ர­ஸா­வாக ஆரம்­பிக்­கப்­பட்டு சகல அனு­ம­தி­களும் பெற்றே நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.
அவ்­வா­றி­ருக்­கையில் எவ்­வாறு இந் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை இவ்­வா­றான கடி­த­மொன்றை அனுப்ப முடியும். இரண்டு முஸ்­லிம்கள் சேர்ந்து வாழ்ந்தால் ஒன்று சேர்ந்து ஐவேளை தொழுகை செய்ய வேண்­டு­மென குர்ஆன் கூறு­கின்­றது.
அவ்­வா­றி­ருக்­கையில் 345 குடும்­பங்கள் வாழும் இப்­ப­கு­தியில் பள்­ளி­வாசல் ஒன்று இருக்கக் கூடாது என -இவ்­வாறு அச்­சு­றுத்தல் கடிதம் அனுப்­பு­வ­தா­னது அர­சியல் அமைப்பை மீறும் செய­லாகும்.
 அதே­நேரம் முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரிக்­கின்­றார்கள். மத்­ர­ஸாக்களை தவ­றான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ளும் இட­மாக கூறு­கின்­றனர். அது மிக­மிக தவ­றா­ன­தாகும்.
இந்­நாட்டில் முஸ்­லிம்கள் எவரும் ஆயு­தங்­களை ஏந்­து­வ­தை-­வி­ரும்­ப­வில்லை. மத்­ர­ஸாக்­களில் உள்­நாட்டில் உள்­ள­வர்­க­ளாலோ வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளாலோ எந்­த­வி­த­மான பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பதை நான் பொறுப்­புடன் கூறு­கின்றேன்.
முஸ்­லிம்கள் மீதான சந்­தே­கத்தைக் கைவி­டுங்கள். அதே­நேரம் குர்ஆன் மீதும்  நபிகள் மீதும் அவ­தூ­றான கருத்தை வெளி­யிட்ட பௌத்த தேரரை கைது செய்ய வேண்­டு­மென நான் பொலி­ஸா­ரி­டத்தில் முறைப்­பாடு செய்­துள்ளேன். அவ­ரு­டைய கூற்று இந்­நாட்டில் உள்ள முஸ்­லிம்­களை மட்­டு­மல்ல உல­கத்­தி­லுள்ள அனைத்து முஸ்­லிம்­க­ளையும் வெகு­வாக பாதித்­தி­ருக்கும்.
அதே­போன்­றுதான் அண்­மைக்­கா­ல­மாக மட்­டக்­க­ளப்பில் பௌத்த தேரர் ஒருவர் கடும் போக்­குடன்  செயற்­ப­டு­கின்றார்.
தமிழ் முஸ்லிம் சகோ­த­ரர்­களை திட்­டு­கிறார். இவ்­வாறு தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களின் மீது கடும் போக்­குடன் செயற்­படும்  பௌத்த தேரர்கள் மீது கூட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.
சிங்­கள, முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் மோதல்­களை ஏற்­ப­டுத்த முயலும்  கடும் போக்­கான தேரர்­களை கைது செய்­வ­தற்கு பதிலாக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதானது மிகவும் வெட்கத்துக்குரியதும் வேதனையானதுமான விடயமாகும்.
அவ்வாறான செயற்பாட்டை  பார்க்கும் போது இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. சட்டம் என்பது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அது பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார். 

Comments