நாளை மைத்திரிக்கும் ஐ.தே.கட்சியினருக்கும் முக்கிய சந்திப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாளை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டு வருவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்படி விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவர ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்
இது குறித்து ஜனாதிபதியிடம் விடுத்து கோரிக்கைக்கு அமைய நாளை பிற்பகல் 4 மணியளவில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டு வருவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்படி விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவர ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்
இது குறித்து ஜனாதிபதியிடம் விடுத்து கோரிக்கைக்கு அமைய நாளை பிற்பகல் 4 மணியளவில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment