வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாட்டுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித்தந்து தேசிய பொருளாதாரத்துக்கு பரந்தளவான பங்களிப்பை நல்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்களுக்காக அரசாங்கம் அதிக பொறுப்புடன் செயற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Comments