தம்புள்ளை பள்ளிக்கு காணி வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலை புதியதோர் இடத்தில் நிர்மாணிப்பதற்கு எத்தனை பேர்ச் காணி வழங்கலாம் என்பதை நகர அபிவிருத்தி அதிகார சபை கண்காணிப்புக்குட்படுத்தியுள்ளது.
தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு இடமாற்றிக் கொள்வதற்கு புதிய இடத்தில் 80 பேர்ச் காணி வழங்குமாறு அண்மையில் பள்ளிவாசல் நிர்வாகம் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கமைய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைகளில் எத்தனை பேர் தொழுகைக்காக சமூகமளிக்கிறார்கள் என்னும் விபரங்களை நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் பள்ளிவாசலுக்குச் சென்று திரட்டியுள்ளார்கள்.
சில தினங்களுக்கு முன்பு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் வருகை தந்து இந்த விபரங்களைத் திரட்டியதாக தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம்.கியாஸ் தெரிவித்தார்.
மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தர முன்வந்துள்ள நிலையிலே இம் முன்னெடுப்புகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபைத் உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீனை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டபோது பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையில் சுமார் 1500 பேர் கலந்து கொள்வதாகவும் 718 பேர் ஜமா அத்தார்களாக பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் கூறினார்.
அதனால் பள்ளிவாசலுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை 80 பேர்ச் காணி ஒதுக்கித்தர வேண்டும் எனக் கோரியுள்ளதாகவும் கூறினார்.
தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு இடமாற்றிக் கொள்வதற்கு புதிய இடத்தில் 80 பேர்ச் காணி வழங்குமாறு அண்மையில் பள்ளிவாசல் நிர்வாகம் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கமைய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைகளில் எத்தனை பேர் தொழுகைக்காக சமூகமளிக்கிறார்கள் என்னும் விபரங்களை நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் பள்ளிவாசலுக்குச் சென்று திரட்டியுள்ளார்கள்.
சில தினங்களுக்கு முன்பு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் வருகை தந்து இந்த விபரங்களைத் திரட்டியதாக தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம்.கியாஸ் தெரிவித்தார்.
மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தர முன்வந்துள்ள நிலையிலே இம் முன்னெடுப்புகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபைத் உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீனை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டபோது பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையில் சுமார் 1500 பேர் கலந்து கொள்வதாகவும் 718 பேர் ஜமா அத்தார்களாக பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் கூறினார்.
அதனால் பள்ளிவாசலுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை 80 பேர்ச் காணி ஒதுக்கித்தர வேண்டும் எனக் கோரியுள்ளதாகவும் கூறினார்.


Comments
Post a Comment