மெளலவி ஆசிரியர்கள் நியமனம் துரிதப்படுமா?
நீண்ட காலமாக நிரப்பப்படாதுள்ள மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் என்பன இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன.
அரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாம் மற்றும் அரபு மொழி போதிக்கும் மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை காலம் தாழ்த்தாது நிரப்புமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இறுதியாக 2010 ஆம் ஆண்டு மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் அப்போது 635 மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் நாடளாவிய ரீதியில் நிரப்பப்பட வேண்டியிருந்த நிலையில் 150 நியமனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் உலமா சபை கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதேேவளை அண்மையில் பதுளையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மெளலவி ஆசிரியர் நியமனங்களை 2017 இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இருப்பினும் குறித்த காலப்பகுதிக்கு முன்னர் காலம் தாழ்த்தாது அந்நியமனங்களை வழங்குமாறு கல்வி அமைச்சரையும் ஜனாதிபதியையும் கோரவுள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
" அரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் 1000 க்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் பல தரப்பினரால் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு 635 மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்த போதும் 150 நியமனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு சமயம் போதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இஸ்லாமும் அரபும் அதில் தேர்ச்சி பெற்றுள்ள மௌலவிகளினாலேயே போதிக்கப்பட வேண்டும். இந்நிலையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில் இந்நியமனம் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளேன்.
கல்வி அமைச்சரூடாக இந்நியமனங்களைத் துரிதப்படுதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் மாத்திரமன்றி தமிழ் , சிங்கள பாடசாலைகளிலும் இஸ்லாம் பாடத்தை போதிப்பதற்கான தகைமை வாய்ந்த ஆசிரியர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.
இதன்காரணமாக பல பாடசாலைகளில் முஸ்லிமல்லாத ஆசிரியர்கள் இஸ்லாம் பாடத்தை போதிக்கின்ற துரதிஷ்டமான நிலைமைகளும் தோற்றம் பெற்றுள்ளன.
எனவேதான் அரசாங்கம் மெளலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவையாகும்.
இதனை வென்றெடுப்பதில் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் என்பன இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன.
அரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாம் மற்றும் அரபு மொழி போதிக்கும் மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை காலம் தாழ்த்தாது நிரப்புமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இறுதியாக 2010 ஆம் ஆண்டு மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் அப்போது 635 மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் நாடளாவிய ரீதியில் நிரப்பப்பட வேண்டியிருந்த நிலையில் 150 நியமனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் உலமா சபை கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதேேவளை அண்மையில் பதுளையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மெளலவி ஆசிரியர் நியமனங்களை 2017 இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இருப்பினும் குறித்த காலப்பகுதிக்கு முன்னர் காலம் தாழ்த்தாது அந்நியமனங்களை வழங்குமாறு கல்வி அமைச்சரையும் ஜனாதிபதியையும் கோரவுள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
" அரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் 1000 க்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் பல தரப்பினரால் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு 635 மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்த போதும் 150 நியமனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு சமயம் போதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இஸ்லாமும் அரபும் அதில் தேர்ச்சி பெற்றுள்ள மௌலவிகளினாலேயே போதிக்கப்பட வேண்டும். இந்நிலையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில் இந்நியமனம் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளேன்.
கல்வி அமைச்சரூடாக இந்நியமனங்களைத் துரிதப்படுதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் மாத்திரமன்றி தமிழ் , சிங்கள பாடசாலைகளிலும் இஸ்லாம் பாடத்தை போதிப்பதற்கான தகைமை வாய்ந்த ஆசிரியர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.
இதன்காரணமாக பல பாடசாலைகளில் முஸ்லிமல்லாத ஆசிரியர்கள் இஸ்லாம் பாடத்தை போதிக்கின்ற துரதிஷ்டமான நிலைமைகளும் தோற்றம் பெற்றுள்ளன.
எனவேதான் அரசாங்கம் மெளலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவையாகும்.
இதனை வென்றெடுப்பதில் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.


Comments
Post a Comment