உரிய அதிகாரத்துடன் செயலாளர் பதவியில் நீடிக்க உத்தரவாதம்
ஹக்கீம் உறுதியளித்தார் என்கிறார் ஹஸனலி
கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எனது செயலாளர் நாயகம் பதவியை உரிய அதிகாரங்களுடன் நீடிப்பதற்கான உத்தரவாதத்தையும் தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்குவதற்கான உறுதியையும் அளித்துள்ளார்.
எனக்கு தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மானின் இராஜினாமா கடிதத்தையும் தலைவர் அமைச்சர் ஹக்கீம் என்னிடம் காட்டினார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
தேசியப் பட்டியல் எம்.பி. பதவியைவிட எனக்கு சகல அதிகாரங்களுடன் கூடிய செயலாளர் நாயகம் பதவியே முக்கியமானது. என்றாலும் தேசியப் பட்டியல் எம்.பி.பதவி தலைவரினால் எனக்கு ஏற்கனவே உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னை மையமாகக் கொண்டு பிளவுப்படக்கூடாது. கட்சியை நான் என் உயிரிலும் மேலாகக் கருதுகிறேன் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.எம்.எச்.எம்.சல்மான் தனது இராஜினாமா கடிதத்தை இதுவரை இச் செய்தி எழுதும் வரை சமர்ப்பிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ.காதர் தெரிவித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் சல்மானின் இராஜினாமா கடிதத்தை ஹஸன் அலியிடம் காண்பித்தாலும் அக்கடிதம் இதுவரை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சிக்குள் சர்ச்சை
2015 ஆம் ஆண்டு கண்டி பொல்கொல்லையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் ஹசன் அலி செயலாளர் நாயகமாகப் பதவி வகிக்கும் நிலையில் உயர்பீட செயலாளர் எனும் பதவியொன்று உருவாக்கப்பட்டு அப்பதவி மன்சூர் ஏ.காதருக்கு வழங்கப்பட்ட நிலையில் கட்சியின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் யார் கையொப்பமிடுவது என்பது தொடர்பில் பிரச்சினை எழுந்தது. ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் எம்.பி.பதவி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டும் அப்பதவி அவருக்கு வழங்கப்படவில்லை.
இறுதியில் ஹசன் அலி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்தார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் மனுக்கள் அனுப்பி வைத்தார். இவ்வாறு சர்ச்சைகள் ஆரம்பித்தன. ஹசன் அலி கட்சியின் உயர்பீட கூட்டங்கள் சிலவற்றிலும் கலந்து கொள்ளவில்லை.
மஹிந்த தேசப்பிரியவுடனான சந்திப்பு
கடந்த வெள்ளிக்கிழமை காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேச பிரியவுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி, செயலாளர் மன்சூர் ஏ.காதர், பிரதி செயலாளரும் கல்முனை முதல்வருமான நிஸாம் காரியப்பர் ஆகியோருக்குமிடையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
கட்சியின் செயலாளர் யார் என்று தீர்மானிக்கும் படியும் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளும்படியும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டினார். இருதரப்பு நியாயங்களும் முன் வைக்கப்பட்டன. ஹசன் அலியை உரிய அதிகாரங்களுடன் செயலாளர் நாயகமாக நீடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
பேராளர் மாநாடு
செயலாளர் நாயகம் ஹசன் அலியின் பதவி நீடிப்பு பேராளர் மாநாட்டிலே தீர்மானிக்கப்படவுள்ளது. இந்த நீடிப்புக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஒருமாதகால அவகாசம் வழங்கியுள்ளார். எனவே பேராளர் மாநாடு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் கூட்டப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எம்.ரி.ஹசன் அலி
செயலாளர் நாயகம் ஹசன் அலி விடிவெள்ளிக்கு மேலும் தெரிவிக்கையில்;
கட்சியுடனான எனது உறவு மானசீக உறவாகும். அதனாலே நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன் என்றார்.
கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மானை தொடர்பு கொள்ள விடிவெள்ளி பலமுறை முயற்சித்த போதும் அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எனது செயலாளர் நாயகம் பதவியை உரிய அதிகாரங்களுடன் நீடிப்பதற்கான உத்தரவாதத்தையும் தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்குவதற்கான உறுதியையும் அளித்துள்ளார்.
எனக்கு தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மானின் இராஜினாமா கடிதத்தையும் தலைவர் அமைச்சர் ஹக்கீம் என்னிடம் காட்டினார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
தேசியப் பட்டியல் எம்.பி. பதவியைவிட எனக்கு சகல அதிகாரங்களுடன் கூடிய செயலாளர் நாயகம் பதவியே முக்கியமானது. என்றாலும் தேசியப் பட்டியல் எம்.பி.பதவி தலைவரினால் எனக்கு ஏற்கனவே உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னை மையமாகக் கொண்டு பிளவுப்படக்கூடாது. கட்சியை நான் என் உயிரிலும் மேலாகக் கருதுகிறேன் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.எம்.எச்.எம்.சல்மான் தனது இராஜினாமா கடிதத்தை இதுவரை இச் செய்தி எழுதும் வரை சமர்ப்பிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ.காதர் தெரிவித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் சல்மானின் இராஜினாமா கடிதத்தை ஹஸன் அலியிடம் காண்பித்தாலும் அக்கடிதம் இதுவரை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சிக்குள் சர்ச்சை
2015 ஆம் ஆண்டு கண்டி பொல்கொல்லையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் ஹசன் அலி செயலாளர் நாயகமாகப் பதவி வகிக்கும் நிலையில் உயர்பீட செயலாளர் எனும் பதவியொன்று உருவாக்கப்பட்டு அப்பதவி மன்சூர் ஏ.காதருக்கு வழங்கப்பட்ட நிலையில் கட்சியின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் யார் கையொப்பமிடுவது என்பது தொடர்பில் பிரச்சினை எழுந்தது. ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் எம்.பி.பதவி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டும் அப்பதவி அவருக்கு வழங்கப்படவில்லை.
இறுதியில் ஹசன் அலி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்தார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் மனுக்கள் அனுப்பி வைத்தார். இவ்வாறு சர்ச்சைகள் ஆரம்பித்தன. ஹசன் அலி கட்சியின் உயர்பீட கூட்டங்கள் சிலவற்றிலும் கலந்து கொள்ளவில்லை.
மஹிந்த தேசப்பிரியவுடனான சந்திப்பு
கடந்த வெள்ளிக்கிழமை காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேச பிரியவுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி, செயலாளர் மன்சூர் ஏ.காதர், பிரதி செயலாளரும் கல்முனை முதல்வருமான நிஸாம் காரியப்பர் ஆகியோருக்குமிடையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
கட்சியின் செயலாளர் யார் என்று தீர்மானிக்கும் படியும் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளும்படியும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டினார். இருதரப்பு நியாயங்களும் முன் வைக்கப்பட்டன. ஹசன் அலியை உரிய அதிகாரங்களுடன் செயலாளர் நாயகமாக நீடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
பேராளர் மாநாடு
செயலாளர் நாயகம் ஹசன் அலியின் பதவி நீடிப்பு பேராளர் மாநாட்டிலே தீர்மானிக்கப்படவுள்ளது. இந்த நீடிப்புக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஒருமாதகால அவகாசம் வழங்கியுள்ளார். எனவே பேராளர் மாநாடு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் கூட்டப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எம்.ரி.ஹசன் அலி
செயலாளர் நாயகம் ஹசன் அலி விடிவெள்ளிக்கு மேலும் தெரிவிக்கையில்;
கட்சியுடனான எனது உறவு மானசீக உறவாகும். அதனாலே நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன் என்றார்.
கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மானை தொடர்பு கொள்ள விடிவெள்ளி பலமுறை முயற்சித்த போதும் அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment