கடந்த வருடத்தை விட அரச வருமானம் அதிகரிப்பு.!
சுங்க திணைக்களம், கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் செயற்றிறன் அதிகரித்துள்ளமையால் இவ்வருடத்தில் அரச வருமானம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. மேலும் முதல் 09 மாதங்களில் 1067 பில்லியன் ரூபா வரி மூலம் வருமானம் கிடைத்துள்ளது.
இதன்படி வரி மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமானது கடந்த ஆண்டை விட 22 சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இதன்பலனாக இவ்வருடத்தில் வரவு செலவு பற்றாக்குறை குறைந்துள்ளது.
அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகள் போன்றவற்றிற்கு 2017ஆம் ஆண்டு வரவு–செலவு திட்டத்தினூடாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது அவற்றின் செயற்பாடுகளைப் பொறுத்தே என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள் ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment