அலெப்போ நகரிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மீள ஆரம்பம்

சிரி­யாவின் அலெப்போ நக­ரத்­தி­லி­ருந்து பொது­மக்­களை வெளி­யேற்றும் நட­வ­டிக்கை மீள ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐ.நா தெரி­வித்­துள்­ளது.

போராளி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்த கிழக்கு அலெப்­போவில் இருந்து நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் அம்­பி­யூ­லன்ஸ்கள் மற்றும் பஸ்­களில் வெளி­யேறி வரு­கின்­றனர்.

குறைந்­தது 500 பேர் வரை சிரிய அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள பகு­தி­களை நோக்கி நகர்ந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக அலெப்­போ­வி­லி­ருந்து பொது­மக்­களை வெளி­யேற்­று­வ­தற்­காக அனுப்­பப்­பட்­டி­ருந்த பஸ்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டி­ருந்­தது.
இத­னைத்­தொ­டர்ந்து பொது­மக்­களை வெளி­யேற்­று­வ­தற்­கான ஒப்­பந்­தத்தில் முறிவு ஏற்­பட்­டது.

ஆயிரக் கணக்­கான மக்கள் நம்­பிக்­கை­யி­ழந்த நிலையில் கிழக்கு அலெப்­போவில் இருந்து வெளி­யே­று­வ­தற்கு காத்­தி­ருப்­ப­தாக அந்­நாட்டு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

ஐ.நாவின் கண்­கா­ணிப்பு குழு­வொன்றை மக்கள் வெளியேற்­றப்­படும் பகு­தி­க­ளுக்கு அனுப்­பு­வ­தற்­கான அனு­மதி தொடர்­பான சம­ரச ஒப்­பந்­த­மொன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் ஐ.நா பாது­காப்பு சபை குறிப்­பிட்­டுள்­ளது.

Comments