பிரதமருடன் அவரது மனைவி உட்பட மேலும் இரு பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணைகளுக்காக ரஷ்ய அதிகாரிகள் அங்காரா விஜயம்;தூதரகங்களுக்கு பாதுகாப்பு
துருக்­கியின் தலை­நகர் அங்­கா­ராவில் நடை­பெற்ற புகைப்­பட கண்­காட்சி ஒன்றின் போது அந்­நாட்­டுக்­கான ரஷ்ய தூதுவர் அன்ட்ரே கார்லோவ் சுட்டுப் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் சர்­வ­தேச ரீதி­யாக கடும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் பிராந்­தி­யத்தில் பதற்ற நிலை­யையும் தோற்­று­வித்­துள்­ளது

திங்கட் கிழமை மாலை அங்­கா­ராவில் நடை­பெற்ற புகைப்­படக் கண்­காட்­சியை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்றிக் கொண்­டி­ருக்கும் போது தூது­வரின் பின்னால் நின்­றி­ருந்த துருக்கி பொலிஸ் அதி­காரி ஒரு­வரே இத் துப்­பாக்கிச் சூட்டுத் தாக்­கு­தலை நடத்­தி­யுள்ளார்.

இதன் கார­ணமாக துருக்­கிக்­கான ரஷ்ய தூதுவர் அன்ட்ரே காலோவ் ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­துடன் துப்­பாக்கிச் சூடு நடத்­திய நபரும் அதே இடத்தில் இரா­ணு­வத்­தி­னரால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

"அல்­லாஹு அக்பர்" என உரத்துக் கோஷம் எழுப்­பி­ய­வாறு தூதுவர் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­படும் காட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெ ளியி­டப்­பட்­டுள்­ளன.

 "அலெப்­போவை மறந்­து­வி­டாதே. சிரி­யாவை மறந்து விடா‍தே. எமது நக­ரங்கள் பாது­காக்­கப்­ப­டாத வரை உனக்கு பாது­காப்பு கிடை­யாது. 

Comments