'பர்தா , ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத முடியாது' : மாணவிகளை அச்சுறுத்திய பரீட்சை மேற்பார்வையாளர்கள்








திருகோணமலை ராஜகிரிய மத்திய மகா வித்தியாலய  பாடசாலையில் இன்று புதன்கிழமை (7) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாணவிகளை  திடீரென பரீட்சை எழுத விடாமல் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த பரீட்சை மேற்பார்வையாளர்கள் முஸ்லிம் மாணவிகளிடம்  பர்தா, ஹிஜாப் போன்றவற்றை  அகற்றவேண்டும் என கடுமையாக  விவாதத்தித்துள்ளனர்.
பின்னர் பரீட்சை எழுத அனுமதித்த போதும், மீண்டும் நாளை வரும்போது முழுவதும் அகற்றப்பட்டு வந்தால் மாத்திரமே பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
(ihzana fareed)

Comments