தவ­றான தக­வல்­களை பரப்பும் இணை­ய­த­ளங்­களுக்கு ஆப்பு!

மீண்டும் நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்­ப­டாமல் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக நாங்கள் பாடு­பட்டுக் கொண்டி­ருக்­கும்­போது நாங்கள் நாட்டை பிரிக்­கப்­போ­வ­தா­கவும் இரா­ணு­வத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவும் பொய்யான பிர­சா­ரங்­களை சிலர் மேற்­கொண்­டு­ வ­ரு­கின்­றனர் என  ஜனா­தி­பதி தெ­வித்துள்ளார்.

அவ்­வாறு இணை­ய­த­ளங்­களில் வரு­கின்ற தக­வல்­களை வெளி­நா­டு­களில் உள்­ள­வர்கள் நம்­பி­வி­டு­கின்­றனர். ஆனால் அவை  பொய்­யான தக­வல்­க­ளாகும் என்றும் ஜனா­தி­பதி  சுட்­டிக்­காட்­டினார்.

மலே­ஷி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம்  ஒன்றை மேற்­கொண்­டி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கோலா­லம்­பூரில்  பிரிக்பீல்ட் என்ற இடத்தில் அமைந்­துள்ள  பௌத்த மகா விஹா­ரையின் மலே­ஷிய பிர­தான சங்க தேரர் கிரிந்தே தம்­ம­ரத்­னவை நேற்றுக் காலை சந்­தித்து  உரை­யா­டி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கிரிந்தே தம்­ம­ரத்ன தேரரும்  சிறிது நேரம் சுமு­க­மான கலந்­து­ரை­யாடல்  ஒன்றை நடத்­தினர்.

இதன்­போது ஜனா­தி­பதி மேலும் குறிப்­பி­டு­கையில்,

வெளி­நா­டு­களில் உள்­ள­வர்கள்  இணை­ய­த­ளங்கள் ஊடா­கவே  அனைத்து விட­யங்­க­ளையும் பார்க்­கின்­றனர். அவற்றில் இலங்கை தொடர்பில் வரு­கின்ற அனைத்து விட­யங்­க­ளையும்  உண்மை என்றும்  வெளி­நா­டு­களில் உள்ள மக்கள் நம்­பு­கின்­றனர்.

வேறு வழியி;ல் தக­வல்கள் வரு­வ­தில்லை.  இணை­ய­த­ளங்கள் ஊடா­கவே தக­வல்கள் வரு­கின்­றன.  உடனே அதில் உள்­ள­வற்றை உண்மை என நம்­பு­கின்­றனர். அதுதான் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது.

நாங்கள் நாட்டைப் பிரிக்­கப்­போ­வ­தா­கவும்  இரா­ணுவ முகாம்­களை அகற்­றப்­போ­வ­தா­கவும்  தவ­றான தக­வல்க  ளை பரப்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

இரா­ணு­வத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவும்  கூறி­வ­ரு­கின்­றனர்.  இவைதான் இணை­ய­த­ளங்­களில் தற்­போது பதி­வேற்­றப்­ப­டும்­வி­ட­யங்­க­ளாக உள்­ளன.

இவை பாரிய பொய்­யான  பிர­சா­ரங்­க­ளாகும். நாங்கள் எவ்­வாறு நாட்டை முன்­னேற்­று­வது என்­பது குறித்து பாடு­பட்­டு­வ­ரு­கின்றோம். மீண்டும்  யுத்தம்  ஒன்று ஏற்­ப­டாமல்  நாட்டை கட்­டி­யெ­ழுப்ப பாரிய செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்ளோம்.

இங்கும் சிலர் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­கின்­றனர்.  எவ்­வ­ள­வா­வது பணத்­தைத்­தே­டிக்­கொள்­ளவே இவ்­வாறு  கூச்­ச­லி­டு­கின்­றனர்.  ஒரு­சிலர் ஒன்­றி­ணைந்து சத்­தம்­போட்­டு­விட்டு  அதனைப் புகைப்­படம் எடுத்து  டொலர்­களை பெற்­றுக்­கொள்­வதே இவர்­களின் நோக்­க­மாகும் என்றார்.

இதன்­போது மலே­ஷிய பிர­தான சங்க தேரர் கிரிந்தே தம்­ம­ரத்ன கருத்து வெளி­யி­டு­கையில், நாங்கள் இங்கு என்ன செய்­ய­வேண்டும் என்று கூறுங்கள்.

எங்­களால் முடிந்­ததை நாங்கள் செய்­கின்றோம்.  இப்­போ­தைய காலத்தில் இணை­ய­த­ளங்­களில் நல்­ல­தைப்­போன்று  தீமை­யான விட­யங்­களும் இடம்­பெ­று­கின்­றன என்றார்.

கிரிந்தே தம்­ம­ரத்­தன தேர­ருடன் கலந்­து­ரை­யா­டிய பின்னர்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  விஹா­ரையில் நடை­பெற்ற  மத வழி­பாட்டு நிகழ்­விலும் கலந்­து­கொண்டார்.

மலே­ஷி­யா­வுக்கு மூன்­றுநாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தைக் கடந்த 15 ஆம் திகதி ஆரம்­பித்த ஜனா­தி­பதி  நேற்று முன்­தினம்   மலே­ஷிய பிர­தமர் அப்துல் ரப்­ஸாக்­குடன் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்தினார்.

மலே­ஷிய பிர­தமர் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற  இந்தப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் ஐந்து புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கை­களும் கைச்­சாத்­தி­டப்பட்டன.

மலே­ஷிய பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  சர்­வ­தேச மேடை­களில் மலே­ஷியா இலங்­கைகு வழங்­கி­வரும் ஆத­ர­வா­னது பெறு­ம­திக்­கு­ரி­ய­தாகும் என்று குறிப்­பிட்டார்.

மேலும் எனது அர­சாங்கம் நல்­லி­ணக்கம் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்ற இரண்டு விட­யங்­க­ளை­யுமே பிர­தா­ன­மாக கொண்டு செயற்­ப­டு­கின்­றது.  பொரு­ளா­தா­ரத்தை  கட்­டி­யெ­ழுப்ப முடி­யா­விடின் நல்­லி­ணக்­கத்தில் வெற்­றி­பெற முடி­யாது.

எனவே  நல்­லி­ணக்கம் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்ற இரண்டு விட­யங்­க­ளிலும் அர்ப்­ப­ணிப்­புடன் இலங்கை அர­சாங்கம் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

Comments