ஹம்பாந்தோட்டை விவகாரம் மேலும் 20 பேர் கைது 

ஹம்பாந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற பதற்றமிகு அசாதாரண சூழ்நிலை தொடர்பில் மேலும் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நேற்று இரவு முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை,  வீதியில் டயர்களை எரித்தமை மற்றும் வீதியை மறித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. 

Comments