அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டும் மகிந்த அணி!

அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கூட்டங்கள் பல நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி நுகோகொட நகரில் பாரிய கூட்டமொன்றை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு , உள்ளுராட்சி தேர்தல் தாமதம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டே இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளன.
இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments