மஹிந்தவும் நாமலும் எதிர்ப்பினை உடன் வாபஸ் பெற வேண்டும்

அம்பாந்தோட்டை கைத்தொழில் பேட்டை வலயத்திற்கு பாரிய எதிர்ப்பினை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் அம்பாந்தோட்டை மகாநாயக்க தேரர்களிடம் சென்று எதிர்ப்பினை மீளபெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேர்தலுக்கு தயாராகும் நோக்குடனே தேசிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படும் இரு பிரதான கட்சியினருக்கு பதிலுக்கு பதில் குற்றச்சாட்டுகளையும் முரண்பாடான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனால் தேசிய அரசாங்க கொள்கையில் மாற்றம் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டை கைத்தொழில் பேட்டை வலயத்தை ஆரம்பிக்கட்டுமா? இடம் மாற்றம் செய்யவா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பாந்தோட்டை திஸ்ஸமஹராமவில் கஜசமரகம என்ற புதிய கிராமத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Comments