முச்சக்கர வண்டி சாரதிகளின் கவனத்திற்கு!

முச்சக்கர வண்டிகள் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகளை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அண்மையில் விசேட வர்த்தமானியொன்று விடுக்கப்பட்டிருந்தது.



அந்த விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைய முச்சக்கர வண்டிகளில் கட்டாயம் ”டெக்சி மீற்றர்” பொறுத்தப்பட வேண்டும்.

மீற்றருக்கமைய கட்டணத்தை பெற்றுக்கொள்வதுடன் அதற்கான ரசீதையும் வழங்க வேண்டும்.

அந்த ரசீதில் கட்டண விபரங்கள் , பயணித்த தூரம் , முச்சக்கர வண்டியின் இலக்கம் , சாரதியின் தொலைபேசி இலக்கம் என்பன காணப்பட வேண்டும்.

அத்தோடு முச்சக்கர வண்டிகளில் சாரதியின் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன..

Comments