மஹிந்தவை சந்திக்கும் மாகாண முதலமைச்சர்கள்!

மாகாண முதலமைச்சர்கள் நாளை (ஞாயிறு) தன்னை சந்திக்க வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பு தனக்கு நல்லதாகவும் அமையலாம், மோசமானதாகவும் அமையலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பலவீனப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ளவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள்.

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ளவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதனால், அவர்களைப் பார்க்க அடிக்கடி சிறைச்சாலைகளுக்கு வரவேண்டியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

Comments