கிண்ணியா மத்திய கல்லூரியினால் மஹ்தி ரோஸன் அக்தார் கௌரவிப்பு



(ihzana fareed)

விஞ்ஞானப் பிரிவில் தேசிய அளவில் சாதித்த மஹ்தி ரோஸன் அக்தாருக்கு வெகு விமர்சையான வரவேற்பும். பண அன்பளிப்பும் வழங்கப்பட்டது.
வெளியான உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின் படி அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் திருமலை மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்ற கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் இன்று (2017.01.11)ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் அபிவிருத்திச் குழு உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டார்.

கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து வீதி ஊர்வளமாக வாகன பவணியில் வலம் வந்தனர்.
இதன் போது ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து இவருக்கு 50000 ரூபா பணமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments