அமைச்சர் பௌசி வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக தாகல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை  எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 5 , 6 ஆகிய இரு தினங்களில விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார இன்று உத்தரவிட்டுளார்.

கடந்த அரசாங்கத்தின் போது வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதால் 10 இலட்சம் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் அவர் சட்டத்தரணி ஊடாக மருத்துவ அறிக்கை ஒன்றை முன்வைத்து, சுகயீனம் காரணமாக தான் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Comments