இலங்கையில் குழந்தைக்கு தாயான குழந்தை
கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருந்த சிறுமி ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குறித்த சம்பவம் பதுளை மாவட்டத்திலுள்ள எல்ல பிரதேசத்தில் நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 15 வயது நிரம்பிய சிறுமியே ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார் என எல்ல பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் பஸ் நடத்துனர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், வயது குறைந்த இந்த சிறுமி கர்ப்பம்தரித்து குழந்தை பிரசவிக்கும் வரை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாத காரணத்தினால் அந்தப்பகுதியிலுள்ள அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எல்ல பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment