மஹிந்தவை ஒதுங்குமாறு வெளிநாடுகள் அழுத்தம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கு செயற்பாட்டு அரசியலிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
பிரபல இரு நாடுகள் இவ்வாறு அழுத்தங்களைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாடுகளின் தூதுவராலயங்கள் இரண்டின் மூலம் இந்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், அயல் நாடுகளின் புலனாய்வுத் துறைகளும் இந்த அழுத்தத்தை அவருக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிர்க் கட்சியின் முக்கிய நபர்களை தனித்தனியாக சந்தித்து இந்த வேண்டுகோளை தூதுவர்களும், புலனாய்வுப் பிரிவுகளும் விடுத்துள்ளதாகவும் இன்றைய சகோதர மொழி தேசிய வார இதழொன்று அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் செல்வாக்கு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அவரின் கௌரவத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இதனை அறிவிக்குமாறும் அந்தப் பிரிவுகள் இரண்டும் குறிப்பிட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ தாமதிக்காமல் தீர்மானம் ஒன்றுக்கு வருமாக இருந்தால், அது அவருக்கும் அவரது அரசியல் எதிர்காலத்துக்கும் நல்லது எனவும் கூட்டு எதிர்க்கட்சி பிரமுகர்களிடம் அப்பிரிவுகள் இரண்டும் விளக்கமளித்துள்ளன.
பிரபல இரு நாடுகள் இவ்வாறு அழுத்தங்களைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாடுகளின் தூதுவராலயங்கள் இரண்டின் மூலம் இந்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், அயல் நாடுகளின் புலனாய்வுத் துறைகளும் இந்த அழுத்தத்தை அவருக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிர்க் கட்சியின் முக்கிய நபர்களை தனித்தனியாக சந்தித்து இந்த வேண்டுகோளை தூதுவர்களும், புலனாய்வுப் பிரிவுகளும் விடுத்துள்ளதாகவும் இன்றைய சகோதர மொழி தேசிய வார இதழொன்று அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் செல்வாக்கு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அவரின் கௌரவத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இதனை அறிவிக்குமாறும் அந்தப் பிரிவுகள் இரண்டும் குறிப்பிட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ தாமதிக்காமல் தீர்மானம் ஒன்றுக்கு வருமாக இருந்தால், அது அவருக்கும் அவரது அரசியல் எதிர்காலத்துக்கும் நல்லது எனவும் கூட்டு எதிர்க்கட்சி பிரமுகர்களிடம் அப்பிரிவுகள் இரண்டும் விளக்கமளித்துள்ளன.


Comments
Post a Comment