கந்தளாய் தி/ஆயிஷா மகளீர் மகா வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை வரவேற்கும் விழா

  



( M,fais)

திருகோணமலை கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/ஆயிஷா மகளீர் மகா வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை வரவேற்கும் விழா இன்று புதன்கிழமை (11) பாடசாலையின் அதிபர் எம்.சி.நசுர்தீன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது வலயக்கல்விப் பணிப்பாளரால் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கந்தளாய் வலயக்கல்விப் பணிப்பாளர் பி.எம்.எஸ்.எஸ்.பஸ்நாயக்க,கந்தளாய் கோட்டக்கல்வி அதிகாரி எம்.எஸ்.ஜுனைட் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

Comments